News May 17, 2024
24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
Beauty Tips: முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் நல்லதா?

ஐஸ் க்யூப்களை முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துப்போகாது, டாக்டரின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.
News September 15, 2025
50% வரிவிதிப்பு குறையுமா? நாளை பேச்சுவார்த்தை

USA-வின் 50% வரிவிதிப்பு, இந்திய வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதனிடையே, வர்த்தகம் பற்றி இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், USA-வின் தலைமை பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரெண்டன் லின்ச், இன்று இரவு இந்தியா வரவுள்ளார். நாளை இந்தியா – USA இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வரி விதிப்பில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 15, 2025
வக்ஃபு வாரிய உத்தரவு: தவெகவுக்கும் கிடைத்த வெற்றி

புதிய வக்ஃபு வாரிய சட்டத்தில் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து இன்று SC உத்தரவிட்டது. இந்த தடையால், இதுதொடர்பான மற்ற மனுக்களுடன் தங்கள் தரப்பு மனுவுக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக தவெக தெரிவித்துள்ளது. இத்தடையின் மூலம் நீதி, சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் விதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக வாதிட்ட சட்டக்குழுவுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.