News September 27, 2024
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், விருதுநகர், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
போன் யூஸ் பண்றீங்களா? உடனே இத படிங்க.. WARNING!

பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. மேலும் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பும் ஏற்படும்.
News October 23, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்துதான் விடுமுறையா, இல்லையா என்பது தெரியவரும்.
News October 23, 2025
எகத்தாளமாக பேசியவருக்கு சரியான பதிலடி

சூரி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை X-ல் பகிர்ந்திருந்தார். அதில், திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு, திண்ணையில் இல்லை நண்பா, பல நாள்களாக ரோட்டில் இருந்தவன் நான். அந்த பாதை தான் வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்று தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெறலாம் என சூரி பதிலளித்துள்ளார்.