News September 27, 2024

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், விருதுநகர், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

இந்திய மண்ணில் சாதனை படைத்த ரோஹித்!

image

SA-வுக்கு எதிரான 2-வது ODI-ல் 14 ரன்களில் அவுட்டானாலும், ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன்களை அடித்த வீரர்களின் லிஸ்ட்டில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (14,192 ரன்கள்) முதல் இடத்திலும், கோலி (12,475 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர். டிராவிட்டை (9,004 ரன்கள்) முந்தி ரோஹித் சர்மா (9,005 ரன்கள்) 3-வது இடத்தில் முன்னேறியுள்ளார்.

News December 4, 2025

மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

image

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

News December 4, 2025

BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

error: Content is protected !!