News April 12, 2025
16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News November 27, 2025
57 வயதில் இரட்டை குட்டி போட்ட அனார்கலி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வு கவனத்தை ஈர்த்து வருகிறது. 57 வயதான அனார்கலி என்ற யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும், 3 மணிநேர இடைவெளியில் பிறந்துள்ளன. மேலே, இரட்டை குட்டிகளுடன் அனார்கலி இருக்கும் போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 27, 2025
‘அஞ்சான் 2’ சம்பவம் இருக்கு.. லிங்குசாமி கொடுத்த அப்டேட்

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவ.28ம் தேதி ரீ-ரிலீசாகும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி ‘அஞ்சான் 2’ அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Re-edited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார். சூரியின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரீ-ரிலீசிற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி ‘அஞ்சான் 2’ பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 27, 2025
சிக்மண்ட் ஃப்ராய்ட் பொன்மொழிகள்

*வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ (அ) ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்.
*காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலை.
*ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
*காதலிக்கும்போது ஒருவர் மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார்.
*கனவுகள் நேற்றைய மிச்சத்திலிருந்து கட்டமைக்கப்படுகின்றன.


