News February 28, 2025
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News February 28, 2025
மரணத்தை முன்னரே சொல்லும் கிணறு!

வாரணாசி காசி விஸ்வநாத் கோவிலுக்கு அருகில் சித்தேஸ்வரி மந்திர் வளாகத்தில், சந்திரனால் உருவானதாக நம்பப்படும் ‘சந்திரகூப்’ என்ற கிணறு உள்ளது. இது, மரணத்தை முன்னரே வெளிப்படுத்தும் சக்தி கொண்டது என பக்தர்கள் நம்புகிறார்கள். இந்து புராணங்களின் படி, யாராவது இக்கிணற்றைப் பார்த்து, அவர்களின் பிரதிபலிப்பு அதில் தெரியவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் மரணிப்பார்கள் என நம்பப்படுகிறது.
News February 28, 2025
‘Time to go’: ஷாக் கொடுத்த அமிதாப்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த பிப்.7 ஆம் தேதி தனது X தள பதிவில், ‘time to go’ எனப் பதிவிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார் என பேசினர். இது குறித்து கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ரசிகர் அமிதாபிடம் கேட்க, அதற்கு அவர் ஜாலியாக பதிலளித்துள்ளார். ‘ஓ பிரதர், நான் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் இது’ என வேடிக்கையாக பதிலளித்தார்.
News February 28, 2025
ஆம்னி பஸ்ஸில் கிடந்த ஆணுறைகள், உள்ளாடைகள்!

புனேவில் உள்ள ஸ்வார்கேட் பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் ரேப் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள், அந்த பஸ் ஸ்டாண்டில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் ஆணுறைகள், உள்ளாடைகள், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கும், சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதற்கும் இதுவே சாட்சி என சிவசேனா (UBT) கடுமையாக விமர்சித்துள்ளது.