News April 18, 2025
10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதேபோல், பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News November 27, 2025
Cinema Roundup: தீபிகாவிற்கு ₹12 கோடி நஷ்டம்

*தனுஷின் ‘தேரே இஸ்க் மெயின்’ படம் ப்ரீபுக்கிங்கில் ₹3.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சீரியல்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம். *தெலுங்கில் ‘MAD’ படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல். *தீபிகா படுகோனின் 82°E என்ற சரும பராமரிப்பு பிராண்ட் 2024-25 நிதியாண்டில் ₹12.26 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
News November 27, 2025
உலகக் கோப்பையை வென்றார் உஸ்பெகிஸ்தான் வீரர்

உஸ்பெகிஸ்தான் ஜவோகிர் சிண்டரோவ், FIDE உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவின் வெய் யி உடனான 2-வது டை-ப்ரேக்கில் 1.5-05 என்ற கணக்கில் ஜவோகிர் வென்றார். இதன் மூலம் இளம் வயதில் (19) செஸ் உலகக் கோப்பையை தட்டிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவருக்கு ₹1.07 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த போட்டியில் பங்கேற்ற 24 இந்திய வீரர்களில், ஒருவர் கூட தகுதி பெறவில்லை.
News November 27, 2025
பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்குகிறது: அகிலேஷ்

அருணாச்சல் தங்களது பகுதி என <<18374689>>சீனா<<>> கூறிவரும் நிலையில், இந்தியாவின் எல்லைகள் குறித்து அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் அசல் மற்றும் தற்போதைய எல்லையை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லை சுருங்கி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், எல்லைகளை காப்பதை விடுத்து, போலி செய்திகள், பிரசாரங்களை அரசாங்கம் நம்பியிருப்பதாகவும் சாடியுள்ளார்.


