News November 19, 2024
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று(நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
வியர்வையால் ஏற்படும் அட்டகாசமான நன்மைகள்

சம்மர் சீசனின் பெரிய பிரச்னையான வியர்வையால் சில நன்மைகளும் உள்ளது. ➤வியர்வை சுரப்பதால், உடலின் வெப்பநிலை குறைகிறது ➤வியர்வை சருமத்தை பளபளப்பாக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் ➤கடினமான உழைப்பால் தான், அதிகப்படியான வியர்வை வெளியேறும். அது இதயத்திற்கு நல்லதே. ஆனால், அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. SHARE.
News April 10, 2026
FLASH: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2025-ல் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை பதவி நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இந்நிலையில், அந்தப் பணம் தன்னுடையது அல்ல என மறுத்து வந்த அவர், தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
News April 10, 2026
நடிகை சுபாஷினி காலமானார்.. நெஞ்சை உலுக்கும் பதிவு

தமிழ் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்தது சின்னத்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யாராவது நெகட்டிவாக பேசினால் அந்த இடத்திலேயே சுபாஷினி இருக்கமாட்டார் என்று சக நடிகை அபிநவ்யா நினைவுகூர்ந்துள்ளார். இவ்வளவு மென்மையான இதயம் கொண்ட சுபாஷினியா இந்த முடிவை எடுத்தது என நெட்டிசன்கள் வருத்தமுடன் SM-களில் கூறி வருகின்றனர்.


