News June 11, 2024

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( இரவு 11 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழை பெய்யும்போது மரத்தடியில் பொதுமக்கள் நிற்க வேண்டாம். சாலையில் மழைநீர் தேங்கி இருந்தால் பார்த்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

Beauty: கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

image

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.

News September 5, 2025

பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

image

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

News September 5, 2025

சந்திர கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

image

நாளை மறுநாள்(செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 5 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். *ரிஷபம்: உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு. *மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். *சிம்மம்: தொழில் பார்ட்னருடன் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். *துலாம்: நிதிநிலை வீழ்ச்சி அடையும். சேமிப்பு குறையும். *கும்பம்: எதிர்பாராத செலவு, விபத்து ஏற்படலாம்.

error: Content is protected !!