News February 16, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அதிக சதமடித்த வீரர்கள் யார்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில், மொத்தம் 4 பேர் அதிகபட்சமாக 3 சதங்கள் விளாசியுள்ளனர். இந்தியாவின் ஷிகர் தவான் (10 போட்டிகள்) 3 சதங்கள், 3 அரை சதங்களும், EX கேப்டன் கங்குலி (13 போட்டிகள்) 3 சதங்கள், 3 அரை சதங்களும் விளாசியுள்ளனர். தெ.ஆப்பிரிக்க EX வீரர் கிப்ஸ் (10 போட்டிகள்), வெஸ்ட் இண்டீஸ் EX வீரர் கெய்ல் (17 போட்டிகள்) ஆகியோரும் தலா 3 சதங்களை அடித்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
திருவள்ளூர்: மனைவி பிரிந்ததால் தற்கொலை!

பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளு உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால், மன உளைச்சலடைந்த பிரசாத், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்று உயிரிழந்தார்.
News January 20, 2026
கவர்னர் உரையே இனி இருக்காதா?

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


