News February 15, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அதிக ரன்கள் குவித்த வீரர் தெரியுமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் அதிகபட்சமாக 791 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 2ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே (742 ரன்கள்), 3ஆவதாக இந்தியாவின் தவான் (701), 4ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா (683), 5ஆவதாக இந்திய முன்னாள் வீரர் கங்குலி (665) ஆகியோர் உள்ளனர். கோலி (529) 11ஆவது இடத்திலும், ரோஹித் (481) 14ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 23, 2026
CINEMA 360: கருப்பு படத்தில் சிம்பு!

*‘கருப்பு’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் *கென் கருணாஸ் இயக்கும் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் *குட்டி டிராகன் கேரக்டரை போல, STR 51 படத்தில் சந்தானத்தின் கேரக்டர் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ₹15 கோடி செலவு செய்துள்ளார்களாம். இதில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, ஆயிஷா கான் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.
News March 23, 2026
தங்கம் விலை சரிவுக்கு இதுவும் காரணம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமே <<19456367>>தங்கம், வெள்ளி விலையின் கடும் சரிவுக்கு<<>> காரணம் என்று கூறிவிட முடியாது. எப்போதும் பாதுகாக்கப்படும் சொத்தாக கருதப்படும் தங்கம், வெள்ளியை பணவீக்கத்தின் காரணமாக பங்குச் சந்தைகளில் விற்கத் தொடங்கியுள்ளனர். இந்த விற்பனை அதிகரித்துள்ளதால் தங்கம், வெள்ளியின் நேரடி விற்பனை விலை கடுமையாக சரிவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News March 23, 2026
மாதவிடாய் நேரத்தில் கடவுளை தரிசிக்கலாமா?

புனித யாத்திரையின்போது மாதவிடாய் ஏற்பட்டால் கடவுளை தரிசிக்கலாமா? இந்த சந்தேகத்தை ஆன்மிக குரு பிரேமானந்த் மகாராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். ‘மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, பாவச் செயல் அல்ல. மாதவிடாய் ஏற்பட்டால் குளித்துவிட்டு தூரத்தில் இருந்து கடவுளை வணங்கலாம். அதேநேரம், பூஜை பொருள்களை தொடக் கூடாது. பிரசாதம் சமைக்கக் கூடாது. தூய பக்தியே இறைவனுக்கு தேவையானது’ என அவர் தெரிவித்துள்ளார்.


