News December 8, 2024

இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: அன்புமணி

image

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024-ல் மட்டும் 569 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக மீட்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 5, 2026

லோனில் பைக் / கார் வாங்குபவர்களுக்கு நற்செய்தி!

image

லோனில் பைக் அல்லது கார் வாங்கும்போது, RC புக்கில் கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவத்தின் பெயர் இருக்கும். லோன் கட்டி முடித்த பின்னரே இதை மாற்ற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கும், RTO-க்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியமில்லை. லோன் செலுத்தி முடித்த உடனே, ஆன்லைனில் தானாகவே RC-ல் அப்டேட் செய்யப்படும். இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் விரிவுப்படுத்தப்படும்.

News March 5, 2026

டைம் ஓவர்.. பாதியிலேயே கிளம்பிய ரயில் டிரைவர்

image

பிஹாரில் ஒரு லோகோ பைலட் தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக ரயிலை பாதியிலேயே நிறுத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மால்டா-சிலிகுரி சென்ற ரயில் நேற்று மதியம் தாக்குர்கஞ்ச் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது லோகோ பைலட் தனது 9 மணி நேர ஷிப்ட் முடிந்துவிட்டதாக கூறி ரயிலை மேலும் இயக்க மறுத்துவிட்டார். இதனால் பயணிகள் 3 மணி நேரம் சிக்கித் தவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 5, 2026

மாணவர்களுக்கு ₹4,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

ஊரகப் பகுதியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி TN அரசு கல்வி உதவித் தொகை (100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ₹1,000) வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜன.20-ல் வெளியானது. தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தகுதியை உறுதி செய்த பின் உதவித் தொகை வழங்கப்படும்.

error: Content is protected !!