News August 15, 2024

கடன் பிரச்னைகளை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

image

சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். அதே போல தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.

Similar News

News December 26, 2025

ராணிப்பேட்டை: கணவன் முன்னே மனைவி பலி!

image

அரக்கோணத்தை சேர்ந்த பிரவின் (35), பிங்கி (30) தம்பதி, நேற்று(டிச.25) கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காஞ்சிபுரம், வெள்ளை கேட் மேம்பாலத்தில் காரை திருப்பிய போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. உடன் பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், கார் இடையில் சிக்கி நொறுங்கியது. இதில் பிங்கி உயிரிழந்தார். பிரவின் சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 26, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹560 உயர்வு

image

தங்கம் விலை இன்று(டிச.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹70 உயர்ந்து ₹12,890-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,03,120-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,920 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News December 26, 2025

சந்தாலி மொழியில் அரசியலமைப்பு வெளியானது

image

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதனை வெளியிடுவதில் பெருமைக்கொள்வதாக கூறிய அவர், இது அந்த மொழியை பேசும் சமூகத்தினருக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ளார். இம்மொழியை, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!