News October 2, 2025
பல வேடங்களில் மோசடி செய்த சைதன்யானந்தா

பாலியல் & மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சைதன்யானந்தா பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு மாணவியிடம், ‘துபாய் ஷேக்குக்கு பொண்ணு வேணும்… யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டுள்ளார். பலரிடம் ஆபாசமாக பேசியுள்ள அவர், வெளியே சொல்லக் கூடாது என்று அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், தான் யுனெஸ்கோ தூதர் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் சிறப்பு அதிகாரி என்றெல்லாம் கூறி மோசடிகள் செய்துள்ளார்.
Similar News
News October 2, 2025
கோவை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 2, 2025
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க விவசாயிகள் பிரச்னை குறித்து பேசப்படும் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை வாங்க, சீனா மறுப்பதால் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி விதிப்பால் கிடைத்த பணத்தில் விவசாயிகளுக்கு உதவுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News October 2, 2025
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல், OPS அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக, காங்., அமமுகவை சேர்ந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.