News April 24, 2024
புதிய சாதனை படைத்தார் சாஹல்

ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் வீரர் சாஹல். இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் முகமது நபி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து பிராவோ 183, பியூஸ் சாவ்லா 181, புவனேஷ்குமார் 174, அமித் மிஸ்ரா 172, சுனில் நரைன் 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News January 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 568
▶குறள்:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
▶பொருள்: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
News January 2, 2026
₹2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக DMK அரசு கூறுவது பொய் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பேற்றது முதல் 2025 மார்ச் வரை ₹3.86 லட்சம் கோடி வாங்கியதாகவும், அதில் மூலதனச் செலவாக ₹1.66 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். RBI புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மீதமுள்ள ₹2.20 லட்சம் கோடி கடனை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக அரசு செலவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
News January 2, 2026
TN-ஐ பற்றி ரஜினி என்ன சொல்வார்? கஸ்தூரி

TN-ல் நடக்கும் சம்பவங்களை பார்த்து அச்சமாக உள்ளதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். சென்னையில் உயர் ரக OG வகை கஞ்சா கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதைதான் அமைச்சர் ஜீரோ என சொல்லியிருப்பார் என்று அவர் கூறினார். TN-ல் மூலைக்கு மூலை போதைப்பொருள் கிடைப்பதாக கூறிய அவர், முன்பு ஒருமுறை TN-ஐ கடவுள் கூட காப்பாற்ற முடியாது என்ற ரஜினி தற்போது என்ன சொல்வார் என்று கேட்க விரும்புவதாக பேசியுள்ளார்.


