News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
Similar News
News October 31, 2025
BREAKING: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கம், கார்டு, UPI மூலம் MRP விலையில் மட்டுமே மது பாட்டில்களை விற்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News October 31, 2025
I AM BACK.. ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்

மேலே உள்ள புகைப்படங்களை பார்த்து ‘பில்லா 3’ ஷூட்டிங் என்று நினைத்துவிட வேண்டாம். ஆங்கில இதழ் ஒன்றுக்காக மாஸ் & கிளாஸ் கலந்த ஸ்டைலிஷ் ஆன லுக்கில் அஜித் போட்டோஷூட் எடுத்துள்ளார். இதற்கு ஃபயர் விடும் அவரது ரசிகர்கள் SM-ல் ‘THALA IS BACK’ என்று டிரெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News October 31, 2025
பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்டக்கூடாது: HC

<<18121841>>பள்ளிக்கரணை<<>> சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை அனுமதிக்கக்கூடாது என அதிமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை HC, SC உத்தரவை பின்பற்றாமல் கட்டுமானத்தை CMDA அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, குடியிருப்பு கட்டும் பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது. இதற்கு, சதுப்பு நிலத்தின் எல்லையை தீர்மானிக்க ஆய்வு நடக்கிறது, 2 வாரங்களில் பணிகள் முடியும் என TN அரசு பதிலளித்துள்ளது.


