News April 8, 2025

39 பந்துகளில் சதம்

image

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

Similar News

News December 3, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த மாஸ் வில்லன்

image

ரஜினியின் ‘ஜெயிலர்’ வெற்றி பெற்றதில், வில்லனாக (வர்மன்) நடித்திருந்த விநாயகனுக்கும் முக்கிய பங்குண்டு. முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், ஜெயிலர் 2-விலும் வர்மன் கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் படக்குழு விதித்துள்ள கட்டுப்பாட்டால், அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.

News December 3, 2025

மகாத்மா காந்தி பொன்மொழிகள்!

image

*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. *கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

News December 3, 2025

கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

image

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.

error: Content is protected !!