News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
Similar News
News April 17, 2025
IPL 2025: வெற்றியை தொடர போவது யார்?

இன்றைய லீக் ஆட்டத்தில், MI – SRH அணிகள் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். இன்று, 2வது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. யார் ஜெயிப்பாங்க?
News April 17, 2025
மலர்களின் விலை மளமளவென சரிவு!

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மளமளவென சரிந்துள்ளது. பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு காரணமாக கடந்த வாரத்தில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் ₹1500-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று(ஏப்.17) ₹500-க்கும், ₹800க்கு விற்பனையான மல்லிகை பூ ₹300-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஜாதிமல்லி, அரளி, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
News April 17, 2025
சின்னத்துரை விவகாரம்.. தனிப்படை அமைத்த போலீஸ்

நெல்லை நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரையை தாக்கிய விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சின்னத்துரையை அழைத்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத 4 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டு வழிப்பறி செய்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறது.