News May 3, 2024

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து ஊதியம் ₹20,000 – ₹80,000 வரை வழங்கப்படும். இதற்கு <>ssc.gov.in/home/apply<<>> என்ற இணையதளத்தின் மூலம் மே 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News November 16, 2025

பத்திரிகை சுதந்திரம்: எந்த இடத்தில் இந்தியா?

image

இன்று (நவ.16) தேசிய பத்திரிகை தினம்! நாட்டின் 4-வது தூணாக கருதப்படுவது பத்திரிகை துறை. ஆனால், நம் நாட்டில் பத்திரிகை துறை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என கேட்டால் அதற்கு பதில் சொல்வது சற்று கடினமே. காரணம் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151-வது இடத்தில் உள்ளது. இது பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை உணர்த்துகிறது. தொடர்ந்து நார்வே முதலிடத்தில் உள்ளது.

News November 16, 2025

BREAKING:நாளை விடுமுறையா?: கலெக்டர் அறிவிப்பு

image

<<18303033>>ஆரஞ்சு அலர்ட்<<>> காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படுமா என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், திருவாரூர் கலெக்டர் மோகன சந்திரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்காமல், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

News November 16, 2025

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க TIPS

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை 2 நிமிடங்களுக்கு முன் படித்ததை மறந்துவிடுவதால் டென்ஷன் ஆகுதா? அவங்கள திட்டாதீங்க. அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள் இருக்கு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை (முட்டைக்கோஸ், வல்லாரை கீரை, திராட்சை) கொடுங்கள். சரியான உறக்கம், சுறுசுறுப்பான விளையாட்டு ஆகியவற்றை பழக்கப்படுத்துங்கள். புதிய புதிய விஷயங்களை கற்பதும் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். SHARE.

error: Content is protected !!