News April 13, 2024

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <>https://ssc.gov.in/home/apply<<>> என்ற இணையதளத்தின் மூலம் மே 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News December 2, 2025

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..

image

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு டிச.8 முதல் டிச.18 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அழைப்பாணையை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இதர விவரம் SMS, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்வை தவறவிட்டால் மறுவாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

News December 2, 2025

டிசம்பர் 2: வரலாற்றில் இன்று

image

*1911–தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைந்த நாள். *1912 – திரைப்பட தயாரிப்பாளர் நாகிரெட்டி பிறந்தநாள். *1933–நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்த நாள். *1960–நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள். *1963–இ-மெயிலை கண்டுபிடித்த சிவா ஐயாதுரை பிறந்தநாள். *1963–நடிகர் நெப்போலியன் பிறந்தநாள். *1988–பெனசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். *2016–அரசியல்வாதி கோ.சி.மணி மறைந்த நாள்.

News December 2, 2025

85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி.. சீமான் காட்டம்

image

முதுநிலை ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததுதான், 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்வெழுதிய பல இளைஞர்கள் தமிழ் சரிவர தெரியாமலேயே பட்டம் பெற்றது கொடுமை என்றும் அவர் கூறியுள்ளார். இதை சரிசெய்திட பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் கற்பித்து, தேர்வு நடத்துவதை அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!