News March 21, 2025

பங்குச்சந்தையில் அதிக முதலீடு: எச்சரிக்கும் மத்திய அரசு

image

மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 28, 2025

100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

image

100 நாள் வேலைத் திட்ட தினசரி ஊதியத்தை ₹17 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு ₹319 வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ₹336ஆக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கான MGNREGA திட்ட நிதி ₹4,034 கோடி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

News March 28, 2025

வந்தாச்சு Google Time Travel.. இதன் மூலம் என்ன பண்ணலாம்?

image

1980களில், உங்க ஊர் எப்படி இருந்திருக்கும் என பார்க்க ஆசையா? அதுக்காகவே Google, Time Travel என்ற டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், 30 வருசத்திற்கு முன் ஒரு இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை Google Mapsல் பார்க்கலாம். தற்போது லண்டன், பாரிஸ் நகரங்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த டெக்னாலஜி, விரைவில் இந்தியாவிலும் வந்துவிடும். 30 வருஷத்திற்கு முன், உங்க ஊர் எப்படி இருந்துச்சு?

News March 28, 2025

BREAKING: அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால் அவரது இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர்.

error: Content is protected !!