News February 13, 2025
விரைவில் 18.4 லட்சம் பேருக்கு வேலை: மத்திய அரசு

வேலைவாய்ப்பு அளிப்பதற்காக 18.4 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா மூலம் 2022 முதல் மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 2019-2020ஆம் ஆண்டில் மட்டும் 42,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
இவரை கண்டுபிடிச்சு குடுங்க: லாரன்ஸ்

வாழ்வாதாரத்திற்காக போராடும் 80 வயது முதியவரை கண்டுபிடிக்க உதவுமாறு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மின்சார ரயிலில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக அதிரசம், போளி விற்பதாக SM-ல் தகவல் பரவியது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ₹1 லட்சம் கொடுக்க தயார் எனவும் அவருடைய விவரம் தெரிந்தவர்கள் தனக்கு தகவல் அளிக்குமாறும் லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 11, 2025
₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
News September 11, 2025
EPS மீது சிலருக்கு வயிற்றெரிச்சல்: உதயகுமார்

கட்சி ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சிலர் கனவு காண்பதாக ஆர்.பி.உதயகுமார் சாடினார். EPS-ன் சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026ல் EPS தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.