News April 23, 2025
மத்திய அரசு வெற்றுக் கூச்சலிட வேண்டாம்: ராகுல்

J&K-வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். அங்கு நிலைமை சீராக இருப்பதாக வெற்று கூச்சலிடாமல், மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சாமனியர்களின் உயிர் இப்படி பறிபோவதை தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசை வலியுறுத்திய TTV

ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 23, 2025
ரத்தன் டாடாவின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ தோற்பது அல்ல தோல்வி. முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி. ▶ வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள். தொலைதூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். ▶ தலைவர் என்பவர் உச்சியில் அமர்பவர் மட்டுமல்ல, மற்றவர்களைத் தங்களால் இயன்றதைச் செய்வதற்கு ஊக்குவிப்பவர். ▶ ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.
News April 23, 2025
பும்ரா, மந்தனாவுக்கு இங்கிலாந்தில் கௌரவம்..!

‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ எனப்படும் லண்டனில் வெளியாகும் விஸ்டன் புத்தகம் ஆண்டுதோறும் 5 வீரர்களை தேர்வு செய்து கௌரவிப்பது வழக்கம். இந்தாண்டு அந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பும்ரா டெஸ்டில் கடந்த ஆண்டு 71 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மந்தனா கடந்த ஒரே ஆண்டில் 1,659 ரன்கள் குவித்துள்ளார்.