News March 13, 2025
ரூ.4,386 கோடி மோசடி தடுப்பு: மத்திய அரசு

ரூ.4,386 கோடி மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் தாக்கல் செய்துள்ள பதிலில், மோசடி குறித்து தொலைபேசி மூலம் 13.36 லட்சம் புகார்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7.81 லட்சம் சிம்கார்டுகளின் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2025
BJP கூட்டணியில் இருந்து இதை செய்தோம்.. இபிஎஸ் புது ரூட்டு!

2026 தேர்தலில் ADMK-BJP கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் EPS செயல்பாடுகள் இருப்பதாக, பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதற்கு காரணம் EPS-இன் X பதிவுதான். அதில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் 7.5% இட ஒதுக்கீடு, காவிரி மேலாண்மை ஆணையம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகிய நல்ல திட்டங்களைச் செய்ததாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
News March 13, 2025
மாசி மக பெளர்ணமியில் ஈசனை வழிபடுவோம்!

மாசி மக பெளர்ணமியான இன்று சிவ வழிபாடு அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் தான் பெளர்ணமியாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரிய, சந்திர வழிபாடும் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும். அதிலும் மாசி மாதத்தில் வரும் இந்த நிறைந்த பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் சாலச் சிறந்தது.
News March 13, 2025
14 கடைகளில் கொள்ளை: ஷாக்கான திருடர்கள்

மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.