News February 26, 2025
PF வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

EPFO வட்டியை 8.35% ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஊழியர்கள் நிம்மதி அடைவர். மோடி ஆட்சியில் EPFO தொடர்ந்து 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் PF வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தியது கவனிக்கத்தக்கது.
Similar News
News February 26, 2025
சீமானுக்கு எதிராக புதிய ஆதாரங்களை வழங்கிய நடிகை

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம், நகைகளை சீமான் வாங்கியது பற்றிய முக்கிய ஆதாரங்களை வளசரவாக்கம் போலீசாரிடம் அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சீமானுக்கு பெரும் சிக்கலாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 26, 2025
மகா சிவராத்திரி: கண் விழித்தே ஆக வேண்டிய ராசிகள்

சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானதாகும். அனைத்து ராசிக்காரர்களும் இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். குறிப்பாக, சனியின் பார்வையில் வரக்கூடிய ராசிகள் இந்நாளில் விழித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன்படி, மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், ஜென்ம சனிக்குள் நுழையப்போகும் மீன ராசிக்காரர்கள் கட்டாயம் விழிக்க வேண்டும்.
News February 26, 2025
மோர்ஸ் கோட் என்றால் என்ன?

IPL தொடருக்காக சென்னை வந்திருக்கும் <<15588615>>தோனியின் டி-சர்ட்டில் உள்ள மோர்ஸ் கோட்<<>> பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால் என்ன? தொலைதூரத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கான எளிமையான முறைதான் Morse Code. இதனை 1830ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். A முதல் Z வரை உள்ள எழுத்துகளுக்கு ‘.’ & ‘_’ மூலம் அடையாளம் கொடுக்கப்பட்டு, அவை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றப்படும்.