News March 28, 2024

₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

image

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அரசு இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில், தேதி குறிப்பிடப்பட்ட கடன் பத்திரங்கள், தங்க பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவை வாயிலாக இந்த நிதியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.

Similar News

News April 21, 2025

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

image

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

News April 21, 2025

வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீர்

image

அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

News April 21, 2025

கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன முதல்வர்.. பாமக திட்டம் என்ன?

image

திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!