News March 28, 2024
₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அரசு இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில், தேதி குறிப்பிடப்பட்ட கடன் பத்திரங்கள், தங்க பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவை வாயிலாக இந்த நிதியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
Similar News
News October 17, 2025
விஜய்யை அடுத்த MGRனு சொல்லலாமா? அமீர்

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். அதேநேரம் MGR என்ற கூர்மையான வாளை, அண்ணா என்ற போர் வீரர் சரியாக பயன்படுத்தியதாகவும், ஆனால் விஜய் என்ற வாளை சரியாக பயன்படுத்த யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார். விஜய் என்ற வாளை பயன்படுத்தப்போவது நல்லவர்களா? தீயவர்களா? என்பது 2026 தேர்தலில்தான் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?.. வந்தது அப்டேட்

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறை விட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க செவ்வாய் அன்றும் சேர்த்து 4 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.
News October 17, 2025
₹21 லட்சத்துக்கு Free ஆக உணவு சாப்பிட்ட நபர்!

ஜப்பானில் ஒருவர் உணவு ஆர்டர் செயலியை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்டுள்ளார். செயலியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என புகார் கொடுப்பதை நம்பி, செயலியும் பணத்தை திருப்பி கொடுத்து, உணவையும் அளித்து வந்துள்ளது. 124 போலி சிம் கார்டு மூலம் 1,095 முறை அவர் உணவை சாப்பிட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் செய்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.