News March 28, 2024
₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அரசு இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில், தேதி குறிப்பிடப்பட்ட கடன் பத்திரங்கள், தங்க பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவை வாயிலாக இந்த நிதியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
Similar News
News November 26, 2025
GK வாசனின் தமாகாவில் ஐக்கியமானது காமக

காமராஜர் மக்கள் கட்சியை(காமக), ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் இணைத்துள்ளார். <<18388915>>நேற்று அரசியலில் இருந்து<<>> விலகுவதாக அறிவித்த அவர், இன்று இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். GK வாசனின், தமாக தற்போது NDA கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஏற்கெனவே, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
SIR இப்போது ஏன் தேவை? SP வேலுமணி புது விளக்கம்

வரும் தேர்தலில் EPS ஜெயிப்பது உறுதி என அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் Ex அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். SIR பணிகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறிய அவர், அதிமுக எப்போதும் நேர்மையாகவே தேர்தலை சந்திக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், தேர்தல் நடக்க இன்னும் 5 மாதங்களே இருப்பதால், தற்போது இந்த SIR பணிகள் நடப்பதே சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
News November 26, 2025
சரிவில் இருந்து மீண்டு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்று(நவ.26) உயர்வுடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 85,609 புள்ளிகளிலும், நிஃப்டி 320 புள்ளிகள் உயர்ந்து 26,205 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Reliance, HDFC Bank, JSW Steel, SBI, Bajaj Finserv உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. உங்கள் பங்குகளின் லாபம் எப்படி உள்ளது?


