News September 28, 2024
மத்திய அரசின் கடன் ₹176 லட்சம் கோடியாக அதிகரிப்பு

2024 ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மத்திய அரசின் மொத்த கடன்தொகை ₹176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ₹9.78 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ₹104.5 லட்சம் கோடியும், குறுகிய கால சேமிப்பு பாதுகாப்பு பத்திரங்கள் மூலம் ₹27 லட்சம் கோடி, கருவூல பத்திரம் மூலம் ₹10.5 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.
News January 19, 2026
கஞ்சாவால் திணறும் தமிழகம்: நயினார்

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் தமிழக மக்கள் நடமாடவே பயப்படுவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், திருவள்ளூரில் போதைக் கும்பலின் தாக்குதலால் 2 இளைஞர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். DMK ஆட்சியில் போதை பேய் தலைவிரித்து ஆடுவதாகவும், போதைப் பொருள்கள் மயமான CM ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து TN தனது சுயத்தை மீட்டெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


