News October 28, 2025
8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

8-வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழு தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர் செயலாளராக பங்கஜ் ஜெயின், பகுதி நேர உறுப்பினராக புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைப்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜன.1 முதல் இக்குழுவின் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
Similar News
News October 28, 2025
BREAKING: தவெகவில் புதிய குழு அமைத்தார் விஜய்

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News October 28, 2025
ஒரே போட்டியில் 8 விக்கெட்.. BCCI-க்கு ஷமி பதிலடி

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.
News October 28, 2025
இந்தியாவில் மீண்டும் பயணிகள் விமானம் தயாரிப்பு

இதுவரை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான HAL, 1988- க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டில் பயணிகள் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PM மோடியின் UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவின் 2, 3-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறுகிய தூர விமான சேவைக்காக, இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.


