News August 8, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News November 27, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.
News November 27, 2025
தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.
News November 27, 2025
இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? HC

‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்க கோரி இளையராஜா, சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களை கேட்டு ரசிப்பதால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என HC கேள்வி எழுப்பியது. பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இம்மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் HC ஒத்திவைத்தது.


