News August 8, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News December 3, 2025
இரும்பு கை மாயாவியாகும் அல்லு அர்ஜுன்!

‘கூலி’ படத்தின் ரிசல்ட் லோகேஷ் கனகராஜை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. அவரின் இரும்பு கை மாயாவி கதையில் நடிக்க, சூர்யா & ஆமிர்கான் ஆகியோர் மறுத்துவிட்டதாக கூறும் நிலையில், படம் குறித்து புது செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதே கதையை லோகேஷ், அல்லு அர்ஜுனிடம் கூறிய நிலையில், அவர் நடிக்க சம்மதித்து விட்டாராம். DC & கைதி 2 படங்களை முடித்துவிட்டு விரைவில் லோகேஷ் இப்படத்தில் இறங்குவாராம்.
News December 3, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாததால் கொஞ்சமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். மீதமுள்ள காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் களத்திற்கு சென்று உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.


