News August 8, 2024

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

image

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.

Similar News

News November 23, 2025

பள்ளிக்கு அருகே கிடைத்த 20 கிலோ வெடிபொருள்கள்

image

உத்தராகண்டின் அல்மோரா பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே 20 கிலோ வெடி மருந்துகள் கிடைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக ஹரியானாவில் வெடிபொருள்கள் சிக்கிய அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்நிலையில், உத்தராகண்டில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 23, 2025

நடிகர் அஜித்துக்கு சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது!

image

நடிகரும், ரேஸருமான அஜித்குமாருக்கு, இத்தாலியில் ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் ரேஸர் பிலிப் சாரியோல் நினைவாக, சர்வதேச ரேஸிங் நிறுவனமான SRO Motorsports Group, இந்த விருதை வழங்கியுள்ளது. நடிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமாருக்கு இந்த விருது பெரும் ஊக்கமாக அமையும் என அவரது ரசிகர்கள், இதை கொண்டாடி வருகின்றனர்.

News November 23, 2025

BREAKING: புயல் உருவாகிறது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று IMD அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த ‘சென்யார்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.

error: Content is protected !!