News August 8, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News December 4, 2025
பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 4, 2025
BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.
News December 4, 2025
அன்புமணி போலி ஆவணங்களை சமர்பித்தாரா?

பாமக தலைவராக அன்புமணி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் டெல்லி HC-ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அன்புமணி சமர்பித்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டே அவரை தலைவராக அங்கீகரித்ததாக EC விளக்கமளித்துள்ளது. ஆனால், அந்த ஆவணங்கள் போலியானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அன்புமணி தலைவர் இல்லையெனில் அதற்கான ஆவணங்களுடன் உரிமையியல் கோர்ட்டை ராமதாஸ் தரப்பு அணுகலாம் என EC தெரிவித்துள்ளது.


