News January 22, 2025

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா

image

TNல் நூற்றாண்டைக் கடந்த 2,238 பள்ளிகளில் நாளை முதல் விழா நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக ஆண்டு விழா, நூற்றாண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் எனவும், அதில் பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடுவதன் மூலம் மக்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News December 3, 2025

ATM கார்டில் உள்ள இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

image

✦ATM கார்டில் உள்ள முதல் எண், அதை வழங்கும் தொழில்துறையுடன் தொடர்பு கொண்டது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன் இவற்றில் எது என்பதை குறிக்கும் ✦அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. VISA, Mastercard, Maestro போன்றவை ✦7-15 வரையான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது ✦கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.

News December 3, 2025

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

BREAKING: விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, குமரி, தி.மலை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!