News January 22, 2025
நாளை முதல் அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா

TNல் நூற்றாண்டைக் கடந்த 2,238 பள்ளிகளில் நாளை முதல் விழா நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக ஆண்டு விழா, நூற்றாண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் எனவும், அதில் பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடுவதன் மூலம் மக்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
RAIN ALERT: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, செங்கை, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழையா?
News November 21, 2025
ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.


