News October 30, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு: நவம்பரில் முன்சோதனை

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.
Similar News
News October 30, 2025
தமிழகத்திற்கு வருகிறது ஆபத்து!

தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர், டிசம்பரில் தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே ‘Montha’ புயல் உருவானது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகளால், எதிர்மறை நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனால், 2019-ம் ஆண்டு போல, பல தீவிர மற்றும் அதி தீவிர புயல்கள் உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
News October 30, 2025
கூலி படத்தை வறுத்தெடுத்த பாக்யராஜ்

PAN Indian படம் என்பதற்காக அந்தந்த ஊரில் இருந்து ஸ்டார்களை இறக்கினால் மட்டும் படம் ஓடுமா என பாக்யராஜ் விமர்சித்திருக்கிறார். என்னதான் PAN இந்தியா படம் என்றாலும், கதை இருந்தால்தானே படம் ஓடும் எனவும், இல்லையென்றால் எவ்வளவு பட்ஜெட் போட்டாலும் பிரயோஜனம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், கூலி படத்தை தாக்கி பேசிய அவர் ஆமிர்கான் கூட அந்த படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.
News October 30, 2025
சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில், 9 பெண்கள் உட்பட 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இவர்களில் 20 பேரின் தலைக்கு ₹66 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சத்தீஸ்கரில் டிச.2023 முதல் தற்போது வரை 2,250 பேருக்கும் மேல் சரணடைந்துள்ளனர்.


