News May 17, 2024
ஆல் இந்தியா ரேடியோவில் சென்சார்

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்டி அளிக்கும்போது, திவால் அரசு, கொடூர சட்டங்கள் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
Similar News
News December 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 29, 2025
எந்த காளையை அடக்கினார் கருணாநிதி? சீமான்

தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரை நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற அவர், காளை வளர்த்தாரா அல்லது அடக்கி காயம் பட்டாரா என கேட்டுள்ளார். மேலும், மதுரை மைதானத்திற்கு கருணாநிதி பெயருக்கு பதிலாக மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கலாமே எனவும், எங்கள் அடையாளங்களை நிறுவுவதில் என்ன தவறு என்றும் பேசியுள்ளார்.
News December 29, 2025
திரிபுரா இனவெறிக்கொலை: 5 பேர் கைது

திரிபுராவை சேர்ந்த அஞ்சல் சக்மா (24) என்ற பழங்குடியின மாணவரை, சீனர் என கூறி போதை கும்பல் கத்தியால் குத்தினர். இதில் சிகிச்சையில் இருந்த அஞ்சல் 18 நாள்களாக சிகிச்சையில் இருந்த அஞ்சல் உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திப்ரா மோத்ரா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


