News April 17, 2025

சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு

image

தேவை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவாமா நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, தென்னிந்தியாவில் அதிகமாக விலை உயர்ந்திருப்பதாகவும், நாட்டின் மத்திய, கிழக்கு, வட மாநிலங்களில் விலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதியில் விலை சற்று குறையும் என டீலர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

சார்தாம் யாத்திரைக்கு ரெடியா நீங்க?

image

பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்வது தான் சார்தாம் யாத்திரை. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் மூடப்பட்டு கோடை காலத்தில் அட்சய திருதியை நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்படும். இதன் தொடர்ச்சியாக வரும் மே 2ல் கேதார்நாத்தும், மே 4ல் பத்ரிநாத் கோயில் நடையும் திறக்கப்படுகிறது.

News April 19, 2025

போர் நிறுத்த முயற்சி: டிரம்ப் ஒதுங்க என்ன காரணம்?

image

ரஷ்யா கடந்த 2014ல் படையெடுப்பு மூலம் உக்ரைனின் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது சட்டவிரோதமானது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைனை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்க மறுக்கிறார். இந்த பிடிவாதம் தான் அமைதி பேச்சில் இருந்து டிரம்ப் ஒதுங்க காரணமாக கூறப்படுகிறது.

News April 19, 2025

அதிமுக கூட்டணியிலிருந்து SDPI விலகல்: அபூபக்கர் அறிவிப்பு

image

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது SDPI எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!