News April 18, 2025

செல்பாேன் கட்டணம் மீண்டும் உயருகிறது.. எவ்வளவு?

image

செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News December 3, 2025

வாடகை வீட்டில் இருப்போருக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

News December 3, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கருணாநிதியே Role Model: CM

image

மாற்றுத்திறனாளிகள் கருணாநிதியை Role Model-ஆக கருத வேண்டும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு விபத்துக்கு பிறகு கருணாநிதிக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதை பொருட்படுத்தாமல் வரலாற்று சிறப்புமிக்க பல அறிக்கைகளை அவர் வெளியிட்டார் என பகிர்ந்துள்ளார். மேலும், கருணாநிதி வீல் சேரிலேயே அமர்ந்திருந்த போதிலும் பம்பரமாக சுழன்று மக்களுக்காக பணி செய்தார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.

News December 3, 2025

மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில் ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 Interest கிடைக்கும். இதை 12-ஆக பிரித்தால், ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!