News April 18, 2025
செல்பாேன் கட்டணம் மீண்டும் உயருகிறது.. எவ்வளவு?

செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News November 9, 2025
தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும்

இந்தியா, துபாயை விட பூட்டானில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்ட அந்நாட்டு அரசு, அங்கு தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. அத்துடன், பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, துபாயில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ₹1,12,700 என்றால், நமது அண்டை நாடான பூட்டானில் ₹84,464 தான்.
News November 9, 2025
Ph.D மாணவிகளுக்கு பெரிய தொகை வழங்கும் திட்டம்

Ph.D பட்டம் பெற படிக்கும் மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் 5 ஆண்டுகளுக்கு மாதம் 35,000 வரை வழங்குகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. அப்ளை பண்ண இங்கே <
News November 9, 2025
ஏன் எல்லாவற்றையும் கேட்டு பெறுகிறார் டிரம்ப்?

USA-வின் வாஷிங்டனில் கட்டமைக்கப்படவுள்ள ஸ்டேடியத்திற்கு தனது பெயரை வைக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் விளையாட்டு வீரர் இல்லை என்பதால் குழுவினர் அவரது பெயரை வைக்க தயங்குகின்றனராம். முன்னதாக 7 போர்களை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வேண்டும் என கேட்டார். இதனால் ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு ஏன் இப்படி அனைத்தையும் அவராகவே கேட்டு பெறுகிறார் என மக்கள் விமர்சித்துவருகின்றனர்.


