News April 18, 2025
செல்பாேன் கட்டணம் மீண்டும் உயருகிறது.. எவ்வளவு?

செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 21, 2025
விஜய்யிடம் இதை LIKE பண்ணேன்: நாஞ்சில் சம்பத்

விஜய்யிடம் உள்ள துணிச்சலை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அரசியலில் 4 சீட்டுகளுக்காக தங்களை குறுக்கிக்கொள்ள உயர்ந்த தலைவர்களே தயாராகிவிட்டார்கள் எனவும், ஆனால் இப்போது அரசியலுக்கு வந்த விஜய், பாஜகவையும் திமுகவையும் தைரியமாக எதிர்கிறார் என்று பாராட்டினார். மேலும், விஜய்யின் இந்த துணிச்சலுக்கு முன்னால் மலைகூட தனக்கு ஒரு குன்றாக தெரிவதாகவும் பேசியுள்ளார்.
News December 21, 2025
10 வருஷம் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியலையா?

வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கள்ள ஓட்டு தொடர்பான <<18619007>>நயினார் நாகேந்திரனின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், 10 வருடமாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, இந்த கள்ள ஓட்டுகள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போது நல்ல ஓட்டாக இருந்தது இப்போது கள்ள ஓட்டாகிவிட்டதா எனவும் கேட்டுள்ளார்.
News December 21, 2025
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.


