News May 20, 2024
ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோ தொகுதியில் உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் வாக்களித்தார். அதேபோல, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அக்ஷய் குமார், நடிகைகள் சான்யா மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் ஜனநாயக கடைமையாற்றினர்.
Similar News
News March 6, 2026
லஞ்ச வழக்கில் சிக்கிய திமுக MLA? வீடியோ ஆதாரத்துடன் ED

அமைச்சர் நேருவுக்கு எதிரான ED அறிக்கையில் பாளையங்கோட்டை திமுக MLA அப்துல் வஹாப்பின் பெயரும் அடிபடுவதால் அறிவாலயத்தை புது புயல் ஆட்டிப்பார்க்க தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது. ED அறிக்கையில், CM பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டுவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ₹1 லட்சத்தை MLA வசூலித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம். இதற்கு வீடியோ ஆதாரங்களும் இருக்கிறது என்கின்றனர்.
News March 6, 2026
2-வது குழந்தை பெறுவோருக்கு ₹25,000..

பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய திட்டத்தை AP அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை பெறுவோருக்கு, ₹25,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கருவுறுதல் விகிதத்தை 1.5-ல் இருந்து 2.1 ஆக உயர்த்துவதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மேலாண்மைக்கான புதிய கொள்கை மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளதாம்.
News March 6, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி வந்தாச்சு

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இதனால் சமீபமாக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு பலரும் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நிதிச்சூழலை பொறுத்து அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதியாக நிச்சயமாக நகைக்கடன் தள்ளுபடி இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


