News October 2, 2025

விஜய் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

image

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை பஸ், வேனுக்கு வாழை மரங்கள் கட்டி பூஜை செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, 41 உயிர்களை குடித்த வாகனத்திற்கு பூஜையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில், இதிலுமா அரசியல் செய்வீர்கள் என விஜய்க்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள்ளனர். உங்கள் கருத்தென்ன?

Similar News

News October 2, 2025

கொசுக்களால் ரத்தம் குடிக்காமல் வாழமுடியுமா?

image

கொசுக்கள் உயிர்வாழ ரத்தம் தேவையில்லை என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், கொசுக்கள் பூக்களின் தேனை உண்டு வாழ்கின்றன. இதில், முட்டையிடும் பெண் கொசுக்களுக்கு புரதம், இரும்பு சத்து தேவைப்படுவதால் அவை ரத்தத்தை குடிக்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கவில்லை என்றாலும் 2 வாரங்களில் இருந்து 1 மாதம் வரை உயிரோடு இருக்கும். இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே.

News October 2, 2025

அரசு வேலைக்காக குழந்தையை புதைத்த கொடூர பெற்றோர்

image

ம.பி.,யில் உள்ள காட்டில் சமீபத்தில், பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தனது அரசு வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவனும், மனைவியும் தங்களது 4-வது குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்துள்ளது. ம.பி.,யில் அரசு பணியாளர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால், 3-வது குழந்தையையும் அத்தம்பதி அரசு ஆவணங்களில் இருந்து மறைத்துள்ளனர்.

News October 2, 2025

எந்த நேரத்தில் டீ குடிப்பது நல்லது?

image

நம்மில் பலருக்கும் அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அல்சர், தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரமான 10.30 – 11 மணி மற்றும் மாலை 3 மணி அளவில் டீ குடிப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே டீ குடியுங்கள். SHARE IT..

error: Content is protected !!