News April 19, 2025
போர் நிறுத்த முயற்சி: டிரம்ப் ஒதுங்க என்ன காரணம்?

ரஷ்யா கடந்த 2014ல் படையெடுப்பு மூலம் உக்ரைனின் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது சட்டவிரோதமானது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைனை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்க மறுக்கிறார். இந்த பிடிவாதம் தான் அமைதி பேச்சில் இருந்து டிரம்ப் ஒதுங்க காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News November 27, 2025
மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

திருச்சியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள நாதகவின் மாநாட்டுக்கு உங்கள் பரம்பரையை அழைத்து வர வேண்டும் என தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடிகனுக்கு தான் கூட்டம் கூடுமா, தற்குறி பயதான் கூடுவானா, தத்துவகாரனுக்கும் கூட்டம் கூடும் என விஜய்யை மறைமுகமாக சாடினார்.234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாதக தமிழகத்தில் பெரிய கட்சி என்றும் சீமான் கூறியுள்ளார்.
News November 26, 2025
EV விற்பனையில் மிரட்டும் மஹிந்திரா..!

கடந்த 7 மாதங்களில் மட்டும் 30,000 EV கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு கார் விற்கப்பட்டுள்ளதாகவும், தங்களது 65% வாகனங்கள் இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் பயணிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், வரும் 2027-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 250 சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.


