News February 2, 2025

CBSE: 10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு…

image

CBSE பாடத்திட்ட 10, 12-வது மாணவர்களுக்கு வரும் பிப்.15 முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. இந்நிலையில், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (அட்மிட் கார்டு) எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் (cbse.gov.in) வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் இதை பள்ளியிலும், தனித்தேர்வர்கள் இணையத்தில் டவுன்லோட் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Similar News

News March 2, 2026

தொகுதிப் பங்கீடு.. அதிமுக கூட்டணியில் இழுபறியா?

image

NDA தலைவர்கள் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியானது. அத்துடன் அன்புமணி பாமகவுக்கு 17 தொகுதி + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை என்றும், PM மோடி பங்கேற்கும் அடுத்த சில மாநாடுகள் குறித்து ஆலோசித்ததாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சில கட்சிகள் அதிக சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

News March 2, 2026

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

News March 2, 2026

‘போர்’ நெதன்யாகுவுடன் PM மோடி பேச்சு

image

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததோடு, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியதாக தனது X பதிவில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் அறிவுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!