News February 26, 2025
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு: ஒருமுறை மட்டும் எழுதலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 முறை எழுதும் வரைவு திட்டத்துக்கு சிபிஎஸ்இ நேற்று ஒப்புதல் அளித்தது. அதில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாணவர்கள் 2 முறையும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டியதில்லை, முதல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதினால், 2ஆவது முறை எழுதுவது அவர்களது விருப்பம், 2ஆவது தேர்வில் குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தேர்வு செய்தும் எழுதலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2025
மோர்ஸ் கோட் என்றால் என்ன?

IPL தொடருக்காக சென்னை வந்திருக்கும் <<15588615>>தோனியின் டி-சர்ட்டில் உள்ள மோர்ஸ் கோட்<<>> பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால் என்ன? தொலைதூரத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கான எளிமையான முறைதான் Morse Code. இதனை 1830ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். A முதல் Z வரை உள்ள எழுத்துகளுக்கு ‘.’ & ‘_’ மூலம் அடையாளம் கொடுக்கப்பட்டு, அவை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றப்படும்.
News February 26, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: NOC கிடைத்தது

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இதையடுத்து, மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய தமிழக விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியில் 20.72 ஏக்கரில் மைதானம் அமைய உள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
News February 26, 2025
ENGக்கு 326 ரன்கள் இலக்கு

ICC சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ENG-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த AFG 50 ஓவரில் 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 177 (6 SIX, 12 FOUR) ரன்கள் விளாசினார். ENG அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் யார் தோல்வி அடைந்தாலும் வெளியேற வேண்டும் என்பதால், இங்கி., அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.