News November 20, 2024

ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடியை தோண்டும் CBI

image

2018-இல் நடந்த ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடி மீது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது CBI. முதன்மை குற்றவாளிகளில் அமித் இறந்துவிட, அஜய் வெளிநாட்டில் மறைந்து வாழ்கிறார். இந்த இருவர் மீதும் சிபிஐ FIR பதிந்துள்ளது. என்சிபி தலைவர் சுப்ரியா சுலே பேசுவதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், SC உத்தரவின்படி, CBI விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், சுப்ரியா சுலே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.

Similar News

News August 15, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் நடிகை கைது

image

கேரளாவை சேர்ந்தவர் நடிகை மினு முனிர். இவர் தமிழிலும் சொற்பமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விடுதியில் 4 பேரை அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரில் தற்போது அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.

News August 15, 2025

தொடர் தோல்வியால் அதிரடி மாற்றத்தில் இறங்கிய LSG

image

IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.

News August 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

error: Content is protected !!