News October 27, 2025
தவெக தலைவர்களுக்கு சிபிஐ சம்மன்

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ N.ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இருவரும் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் A2 ஆக N.ஆனந்த், A3 ஆக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 18, 2026
இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

சுமார் 38 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் <<18892646>>ODI தொடரை<<>> நியூசிலாந்து வென்றுள்ளது. டேரில் மிட்செல் 3 இன்னிங்ஸில் 352 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வில்லனாக மாறினார். முன்னதாக, சொந்த மண்ணில் 2023-ல் ஆஸி.,யிடம் 2-1 என்ற கணக்கில் ODI தொடரை IND இழந்திருந்தது. மேலும், இந்தூர் மைதானத்தில் விளையாடிய 7 ODI-களில் இந்தியா எதிர்கொள்ளும் முதல் தோல்வி இதுவாகும். இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?
News January 18, 2026
பிரபல நடிகர் காலமானார்

‘Kung Fu Hustle’ என்ற படத்தில் ‘Beast’ ரோலில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் லியுங் சியு-லுங் (77) காலமானார். ‘The Legendary Fok’ மற்றும் ‘Fist of Fury’ ஆகிய சீரிஸ்களில் இவரது Chen Zhen கதாபாத்திரம் இன்றுவரை பெரிதும் ரசிக்கப்படுகிறது. Kung Fu கலையை ஸ்டைலாக வெளிப்படுத்திய இவரது மறைவை தன்னால் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ முடியவில்லை என லெஜண்ட் ஜாக்கி சான் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க TIME OUT

தமிழகத்தில் நடைபெற்ற SIR பணிகளின் அடிப்படையில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 13.3 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


