News September 29, 2025

கரூர் துயரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: GK வாசன்

image

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுப்பதில்லை என ஜிகே வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பரப்புரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை காப்பாற்ற உயர்வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

Similar News

News September 29, 2025

தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டாரா விஜய்?

image

கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசலைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பிய விஜய், தற்போது திருச்சி விமானம் நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவர் வீட்டிலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில், சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு Charter flight ஒன்று கிளம்பியதையும், ஒப்பிட்டு பார்த்து இச்செய்தி வெளியாகி இருக்கிறது.

News September 29, 2025

BREAKING: அவசரமாக கிளம்பினார் விஜய்

image

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் கரூர் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

News September 29, 2025

ராகுல் காந்தியிடம் எமோஷனலாக பேசிய விஜய்

image

விஜய்யுடன் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்த ராகுல், அங்கு நடந்தவை பற்றியும், விஜய்யின் மனநிலை குறித்தும் கேட்டறிந்தார். ராகுலிடம் விஜய் எமோஷனலாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே விஜய்க்கும் ராகுலுக்கும் நல்லுறவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் இந்த Call பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!