News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News November 23, 2025
Thalaivar 173-ல் சுந்தர் சி-க்கு பதிலாக இவரா?

தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதையடுத்து இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியையும் கமலையும் சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் சொன்ன கதை பிடித்திருப்பதாகவும், அவரே தலைவர் 173-ஐ இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
News November 23, 2025
மக்களை சந்திக்க புறப்பட்டார் விஜய்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி, தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


