News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார்.. FIRST PHOTO ❤️❤️

பாலிவுட் லவ் பேர்ட்ஸ் கியாரா அத்வானி & சித்தார்த் மல்கோத்ரா தங்கள் மகளின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோவில் இருவரும் தங்களின் உயிர்வரவான குழந்தையின் காலை தாங்கி பிடித்த உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலே உள்ள போட்டோவை Swipe செய்து ஜூனியர் கியாராவை பாருங்க. ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா நடித்திருந்தார்.
News November 28, 2025
‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 28, 2025
பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.


