News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
News November 25, 2025
விவசாயிகளின் கவலையை புரியாத திமுக: R.B. உதயகுமார்

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், EPS நீலிக்கண்ணீர் வடிப்பதாக CM ஸ்டாலினின் விமர்சனத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகளின் கண்ணீர், கவலையை புரிந்துகொள்ளாத அரசாக திமுக இருக்கிறது என்று சாடிய அவர், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிகொடுத்துவிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என்றும் தனது குறைகளை மறைக்கவே EPS-ஐ <<18374909>>ஸ்டாலின் <<>>விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
News November 25, 2025
2-வது திருமணம்.. நடிகை மீனா முடிவை அறிவித்தார்

2-வது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என நடிகை மீனா அறிவித்துள்ளார். 2022-ல் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு, மகளுடன் தனியாக வசித்து வரும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீனா, நடிகர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்ய உள்ளதாக பேசப்பட்டது. அதனை மறுத்துள்ள அவர், சிலர் ஏன் எனது 2-வது திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் எனப் புரியவில்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


