News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
மாற்று என்றவர்கள் மறைந்து போனார்கள்: MK ஸ்டாலின்

திமுகவிற்கு மாற்று என்று இப்போதும் சிலர் பேசிக் கொண்டிருப்பதாக விஜய்யை, ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர், மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் மாறி போனதாகவும் மறைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றும் மாறாத திமுக, தமிழக மக்கள் மனதிலிருந்து மறையவில்லை என்றும் கூறியுள்ளார். நம் கொள்கைதான் நமது பலம் என்ற அவர், இதுவே தமிழ்நாடு Politics என்றார்.
News September 18, 2025
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: PM

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா அஞ்சாது என PM மோடி கூறியுள்ளார். நம் சகோதரிகளின் குங்குமத்தை அகற்றிய பாக். பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்ததாகவும், இந்திய ஆயுதப் படைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத தாயின் பாதுகாப்புக்கு நாடு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் PM குறிப்பிட்டார்.
News September 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க