News June 25, 2024

மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

image

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

தஞ்சை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

2018-ம் ஆண்டு அய்யம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற பொருட்களை திருடு போன வழக்கில் அய்யம்பேட்டை போலீசார் விசாரணையில் குற்றவாளியான பாபநாசம் வடக்கு மாங்குடியைச் சேர்ந்த தங்கமுனுசாமி என்பவர் கைது செய்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமுனுசாமிக்கு 4 வருட சிறை தண்டனை, 2000 அபதாரம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

News November 20, 2025

உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

image

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.

News November 20, 2025

Cinema Roundup: ரஜினி படத்தில் இணைந்த அபேக்‌ஷா போர்வால்

image

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.

error: Content is protected !!