News June 25, 2024
மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (ஜன.21) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 30 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.
News January 21, 2026
Zomato நிறுவனர் திடீர் பதவி விலகல்!

Zomato, Blinkit ஆகியவற்றின் தாய் நிறுவனமான Eternal நிறுவனத்தின் CEO, நிர்வாக இயக்குநர் பதவிகளில் இருந்து, அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் விலகியுள்ளார். Blinkit நிறுவனத்தின் CEO அல்பிந்தர் சிங் Eternal CEO ஆக பொறுப்பேற்றுள்ளார். 2025-ன் 3-வது நிதியாண்டில் அந்நிறுவனம் ₹102 கோடி வருமானம் ஈட்டியபோதும், 10 நிமிட டெலிவரிக்கு அரசு தடைவிதித்த நிலையில், இத்தகைய மெகா மாற்றம் நிகழ்ந்துள்ளது.
News January 21, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) தமிழக விவசாயிகள் பெற தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும். அடுத்த மாதம் தொகையை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. SHARE.


