News June 25, 2024
மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

இன்று முதல் செப்.19 வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (17-ம் தேதி) ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் 2 நாள்கள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
ஆன்லைனில் ஈசியாக ITR File செய்வது எப்படி?

*<
*Assesment Year 2025- 2026-> Select Mode of Filing-> Online-ஐ தட்டவும்.
*இதில், Start New Filing-> Individual-ஐ தட்டவும்.
*சம்பளதாரர் எனில், ‘ITR 1’. மியூச்சுவல் வருமானம், வெளிநாட்டு வருமானம் எனில் ‘ITR 2’-ஐ தட்டவும். *தனிநபர், வருமான விவரங்களை செக் செய்யவும். *Verify செய்து, OTP-யை பதிவிட்டு, Submit கொடுக்கவும். அவ்வளோதான் முடிஞ்சு! SHARE IT.
News September 15, 2025
RRB-யில் 368 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <