News July 1, 2024
விஷச்சாராய வழக்கில் 11 பேருக்கு சிபிசிஐடி காவல்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கைதான 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Similar News
News September 20, 2025
BREAKING: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் நீண்டகாலமாக பங்களிப்பு அளித்து வரும் நட்சத்திரங்களுக்கு, வழங்கப்படும் இவ்விருதை மோகன்லால் இம்முறை பெறுகிறார். இதற்கு முன்பு மலையாள திரையுலகில் இருந்து அடூர் கோபாலகிருஷ்ணன் இவ்விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 23-ம் தேதி நடக்கும் தேசிய விருதுகள் விழாவில் மோகன்லால் இவ்விருதை பெறுகிறார்.
News September 20, 2025
குட் பேட் அக்லியில் இளையராஜா பாடல்கள் கட்

இளையராஜா தொடுத்த காப்பிரைட் வழக்கை அடுத்து, Netflix தளத்திலிருந்து ‘குட் பேட் அக்லி’ படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் படம் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. அதில், பழைய பாடல்களுக்கு பதிலாக ஜிவியின் புதிய பின்னணி இசை மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘புலி புலி’ பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது சரியாக பொருந்தியுள்ளது என்று சிலரும், பழைய பாடல்களே மொரட்டு வைபாக இருந்தது என்று சிலரும் கூறி வருகின்றனர்.
News September 20, 2025
நான் பேசுவதே 3 நிமிடம் தான்: விஜய்

தனது தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். நாகை பரப்புரையில் பேசிய அவர், அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், 5 நிமிடங்கள்தான் பேச வேண்டுமென கூறுவதாகவும், தான் பேசுவதே 3 நிமிடங்கள்தான் என்றும் விஜய் கிண்டலாக கூறினார். விஜய் பரப்புரைக்கான கட்டுப்பாடுகளை எப்படி பார்க்குறீங்க?