News April 22, 2025
காவிரி தண்ணீர்.. கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மையின் 39-வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
Similar News
News October 28, 2025
பள்ளிக்கரணை விவகாரம்.. தமிழக அரசு விளக்கம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா இடங்களுக்கு மட்டுமே அலுவலர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் TN அரசு கூறியுள்ளது. அங்கு ராம்சார் தலம் அமையும் இடம் இன்னும் புல எண்களுடன் வரையறுக்கப்படவில்லை என்று TN அரசு கூறியுள்ளது.
News October 28, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *காட்டாற்று ஓர சாலைகளில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும். சாலைகளில் குறைவான தண்ணீர் இருந்தாலும் மாற்றுவழியை தேர்வு செய்யவும். *பஸ்களில் மழைநீர் ஒழுகுவது உள்ளிட்ட பிரச்னை இருந்தால் கிளை மேலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். *கடலோர சாலை பஸ் டிரைவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.
News October 28, 2025
SPORTS ROUNDUP: ரஞ்சியில் தமிழகம் முன்னிலை

*நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில், தமிழகம் முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. *19 வயதுக்கு உட்பட்ட மகளிர் நட்புறவு கால்பந்தில், இந்தியா கஜகஸ்தான் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. *மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் ஒலிம்பியாடில், கிஷன் கங்கோலி தங்கம் வென்றார். *23 வயதுக்கு உட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சுஜீத் கல்கல் தங்க பதக்கத்தை வசப்படுத்தினார்.


