News April 1, 2025
‘காவிரி – வைகை – குண்டாறு’ எங்கள் பிள்ளை: துரைமுருகன்

காவிரி – வைகை – குண்டாறு திட்டம் நாங்கள் பெற்ற பிள்ளை அதனை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேரவையில், MLA சி.விஜயபாஸ்கர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய அவர், இத்திட்டத்திற்காக இதுவரை ₹288 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். 2008இல் கருணாநிதி முன்மொழிந்த இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

1. தளி ஏரி
2.கிருஷ்ணகிரி கோட்டை
3.அய்யூர் இயற்கை பூங்கா
4.கெலவரப்பள்ளி அணை
5.அவதானப்பட்டி ஏரி பூங்கா
6.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
7.கே.ஆர்.பி அணை
8.கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
9.காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
10.ராயக்கோட்டா கோட்டை
11.ராஜாஜி நினைவிடம்
12.தளி வேணுகோபால சுவாமி கோவில்
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
News November 27, 2025
செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்: செம்மலை

பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. அதுபோல செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செம்மலை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தற்கொலைக்கு சமமான முடிவு என்று விமர்சித்த அவர், தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
News November 27, 2025
விவசாயிகளின் முதுகில் குத்தியவர் EPS: ரகுபதி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகள் முதுகில் குத்தியவர் EPS என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டிக்காமல், திமுகவை குறை கூறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசு என்றால் அமைதியாக இருக்கும் EPS, திமுக என்றால் ஆவேசமாகி விடுவதாகவும் விமர்சித்துள்ளார். EPS-க்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


