India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில் சிவகாசியில் உள்ள தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மையங்களையும் தூய்மைப்படுத்தி மேசை மற்றும் இருக்கைகளை வரிசைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேசைகளில் தேர்வு வரிசை எண் எழுதும் பணியிலும் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்களை கொண்டு தொடர்ந்து கண்காணித்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுஹாதா ரஹிமா அறிவுறுத்தியுள்ளார். மேலும் குவாரி குத்தகைதாரர் அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை யாருக்கும் உள்குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதையும் கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவு.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மேம்பாலம் பணிக்காக மணல் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து 3 டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண் அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மாா்ச்.1 முதல் மார்ச்.3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர், மதுரை,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகா், மத்திய சேனையைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளிகளான வெள்ளையன், மகேஸ்வரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இதில் பிரவீன்(5) நேற்று மாலை விளையாட சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தேடிய போது, மற்றொரு வீட்டு தகரக் கொட்டகையின் மேலே செல்லும் மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்தாா். இதையடுத்து, ஆமத்தூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் கைபேசி எண்ணை வாகன பதிவு சான்றுடன் இணைப்பது போக்குவரத்து துறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை கொடுத்து இணைத்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

சீமான் வீட்டில் நடந்த காவல் துறையின் அராஜகம் வன்மையாக கண்டிக்கதக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை எதிர்க்கும் எல்லா இயக்கங்களையும் ஒடுக்க இல்லாமல் அழிக்க தொடர்ந்து திமுக முயல்கிறது. அதற்கு காவல்துறை ஏவல் துறையாகிறது எனவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான போக்கு எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் – மதுரைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் இருந்து வீரசோழன் சென்ற அரசுப்பேருந்து மானாசாலை அருகேயுள்ள சம்பக்குளம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக நரிக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை

காரியாபட்டியில் கடந்த பிப்., 4ல் எலக்ட்ரீசியன் சுப்புராஜ் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 30 பவுன் நகை திருடப்பட்டது. இவ்வழக்கை காரியாபட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கணேசனை 39, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கூட்டாளியான வ.புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமாரை நேற்று காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு ஜூன்.1 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தை www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதள சேவையினை பயன்படுத்தலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.