Virudunagar

News October 1, 2025

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள்க்கு சிறப்பு அலங்காரம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் (செப். 23) தொடங்கியது. இதனையடுத்து 8-ம் நாளான நேற்று ஆண்டாள் சிறப்பு பூஜையும், விசேஷ புறப்பாடு மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

News October 1, 2025

விருதுநகர்: VOTER ID ல இத மாத்தனுமா??

image

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்<>கு கிளிக்<<>> செய்யுங்க.
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 1, 2025

சிவகாசியில் போக்குவரத்து மாற்றம்!

image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் காலை 7 – 10 மணி வரை, மாலை 4 முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்களுக்கும், சரக்கு லாரிகளுக்கும் நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தியும் பொருட்கள் ஏற்றவும் தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர்

News October 1, 2025

விருதுநகர் மக்களே ஆதார் சேவை கட்டணத்தில் மாற்றம்!

image

விருதுநகர் மக்களே, 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் இன்று முதல் மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர்

News September 30, 2025

விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

image

மதுரையில் இருந்து புனலூர் சென்ற ரயிலில் அடிபட்டு காவி கலர் பச்சை பார்டர் வேஷ்டியும், வான நீலம் கலரின் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அடையாளம் தெரியாத 65 வயது உடைய முதியவர் விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி ரயில் நிலையம் பகுதியில் கடந்த செப்.26ம் தேதி தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 30, 2025

விருதுநகர்: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News September 30, 2025

விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News September 30, 2025

விருதுநகர்: வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை… APPLY NOW!

image

விருதுநகர் மக்களே இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 – 36 வயதுகுட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News September 29, 2025

விருதுநகரில் 9 பேர் மீது வழக்கு பதிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் கௌதம் இவருக்கு விருதுநகரில் உள்ள உறவினர் பெண்ணுக்கும் திருமணமானது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து கௌதம் வேறு திருமணம் செய்து மதுரையில் வசிக்கிறார். குழந்தையை பார்க்க வருமாறு உறவினர் மாரிமுத்து அழைத்ததால் கடந்த செப் 22ஆம் தேதி விருதுநகர் வந்தார். அப்பொழுது முனீஸ்வரன் மாரிமுத்து ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் கௌதமை தாக்கினர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு.

News September 29, 2025

விருதுநகர்: ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறும் இடம்

image

விருதுநகர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புலியூரான் மற்றும் பந்தல்குடியில் உள்ள சமுதாய கூடத்தில் நாளை புலியூரான் & பந்தல்குடி கிராம‌ பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் 13 துறைகளை சார்ந்த கோரிக்கைகள் நிவர்த்தி செய்திட ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு பயன்பெற வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!