India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட எவ்வளவோ களங்களும், தேவைகளும் உள்ளது. அதை உணர்ந்து செயல்படுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04562 – 252600, 252601, காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101,குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு -9443967578 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல்ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு மலரும் புன்னகை என்ற திட்டத்தின் கீழ் பல் கிளிப் (BRACES) பொருத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ரூ.30,000 வரை செலவாகும் நிலையில் இத்திட்டத்தில் 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல் கிளிப் பொருத்தப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக பலன் அளித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரை சேர்ந்த 15, 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் இருவரை விளம்பர பதாகைகள் அமைக்க பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சாம் டேவிட் (25) என்பவர் சிவகாசியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மயக்கமடைந்த இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சாம் டேவிட் மீது போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்
ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.