India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
விருதுநகர் (மா) அருப்புக்கோட்டையில் வரும் அக். 11ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அருப்புக்கோட்டை தேவாங்க கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், 60 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு <
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள <
காரியாபட்டி அருகே தொடுவன்பட்டியில் உள்ள வாழவந்தம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. இதில் இங்குள்ள முளைப்பாரி பந்தலில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், நேர்த்திக்கடனுக்காக வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முளைப்பாரி, மின்விளக்குகள், குழாய், ஓயர்கள் என அனைத்தும் எரிந்துள்ளன. இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்நத்ததை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (50), இவர் நேற்று காலை 5:45 மணிக்கு மேல தொட்டிய பட்டியில் இருந்து மோகன் பால்பண்ணையில் பால்கேன்கள் எடுத்து விட்டு, ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது நாய்கள் குறுக்கிட்டது. இதில், பாலத்தில் ஆட்டோ மோதியதில் நவநீதகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார்நகரில் உள்ள முள்காட்டு பகுதியில் டவுன் எஸ்ஐ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் கார்த்திக் (36), அந்தோணி மகன்கள் குமரேசன் (30) லட்சம் என்ற குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு <
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் (செப். 23) தொடங்கியது. இதனையடுத்து 8-ம் நாளான நேற்று ஆண்டாள் சிறப்பு பூஜையும், விசேஷ புறப்பாடு மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் காலை 7 – 10 மணி வரை, மாலை 4 முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்களுக்கும், சரக்கு லாரிகளுக்கும் நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தியும் பொருட்கள் ஏற்றவும் தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர்
Sorry, no posts matched your criteria.