Virudunagar

News October 2, 2025

விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 2, 2025

விருதுநகரில் 3,500க்கும் மேலான வேலைவாய்ப்புகள்!

image

விருதுநகர் (மா) அருப்புக்கோட்டையில் வரும் அக். 11ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அருப்புக்கோட்டை தேவாங்க கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், 60 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News October 2, 2025

விருதுநகர்: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இப்பயனுள்ள தகலவை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 2, 2025

விருதுநகர்: திருவிழாவில் திடீர் தீ விபத்து!

image

காரியாபட்டி அருகே தொடுவன்பட்டியில் உள்ள வாழவந்தம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. இதில் இங்குள்ள முளைப்பாரி பந்தலில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், நேர்த்திக்கடனுக்காக வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முளைப்பாரி, மின்விளக்குகள், குழாய், ஓயர்கள் என அனைத்தும் எரிந்துள்ளன. இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 2, 2025

விருதுநகர்: நாய்கள் குறுக்கே வந்ததால் ஒருவர் பலி

image

ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்நத்ததை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (50), இவர் நேற்று காலை 5:45 மணிக்கு மேல தொட்டிய பட்டியில் இருந்து மோகன் பால்பண்ணையில் பால்கேன்கள் எடுத்து விட்டு, ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது நாய்கள் குறுக்கிட்டது. இதில், பாலத்தில் ஆட்டோ மோதியதில் நவநீதகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 1, 2025

விருதுநகர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்

image

விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார்நகரில் உள்ள முள்காட்டு பகுதியில் டவுன் எஸ்ஐ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் கார்த்திக் (36), அந்தோணி மகன்கள் குமரேசன் (30) லட்சம் என்ற குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

News October 1, 2025

விருதுநகர்: ரூ.35,000 ரயில்வே வேலை ரெடி!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 1, 2025

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள்க்கு சிறப்பு அலங்காரம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் (செப். 23) தொடங்கியது. இதனையடுத்து 8-ம் நாளான நேற்று ஆண்டாள் சிறப்பு பூஜையும், விசேஷ புறப்பாடு மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

News October 1, 2025

விருதுநகர்: VOTER ID ல இத மாத்தனுமா??

image

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்<>கு கிளிக்<<>> செய்யுங்க.
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 1, 2025

சிவகாசியில் போக்குவரத்து மாற்றம்!

image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் காலை 7 – 10 மணி வரை, மாலை 4 முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்களுக்கும், சரக்கு லாரிகளுக்கும் நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தியும் பொருட்கள் ஏற்றவும் தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர்

error: Content is protected !!