Virudunagar

News October 4, 2025

ராஜபாளையம்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

ராஜபாளையம் சேத்தூர் சேகரப்பாண்டி மேல்நிலைப் பள்ளியில் இன்று “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” தொடங்கியுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் இலவசமாக சுகாதார பரிசோதனை செய்யக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, இரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

News October 4, 2025

விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

image

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News October 4, 2025

சிவகாசி: பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது!

image

சிவகாசி சப் கலெக்டர் விடுப்பில் சென்றதை அடுத்து, பாலாஜி சிவகாசி RTOவாக பொறுப்பேற்றுள்ளார். இவர் நேற்று கூறுகையில், பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அரசின் வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் மக்கள், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என்றும் தெரிவித்தார்.

News October 4, 2025

விருதுநகர்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

விருதுநகர் (மா) காரியாபட்டி அருகே அச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டியன். இவரது வீட்டில் செட் அமைக்கும் பணியில் தங்க மணி (19), கனகவேல் (19), கருப்பையா (20) ஆகியோர் பணியாற்றிய போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தங்கமணி உயிரிழந்துள்ளார். கனகவேல், கருப்பையா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News October 3, 2025

காரியாபட்டியில் வீட்டின் மீது விழுந்த மின்கம்பம்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பனிக்குறிப்பு கிராமத்தில் இன்று ராக்கம்மாள் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் மீது அருகே இருந்த மின்சாரக்கம்பம் முறிந்து விழுந்ததில் வீட்டின் முன்புறம் இருந்த ஓடுகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தால் எந்தவித உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சம்பவ இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

News October 3, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
3. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News October 3, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க

News October 3, 2025

விருதுநகர்: டிகிரி போதும்., ரயில்வே வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே; இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவையாகும். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News October 3, 2025

விருதுநகர்: போலீஸ் ஸ்டேஷனில் தவறி விழந்த காவலர் உயிரிழப்பு!

image

துலுக்கபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி காவல் நிலையத்தில் பணியில் போது, மாடியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து சுரேஷ்குமார் காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 3, 2025

விருதுநகர்: அரசு இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் சேவுகபட்டினம் அரசு பள்ளியில் நாளை (அக். 4) தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு, மகப்பேறு, இருதயம், தோல், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, மனநலம் என பல்வேறு துறை சார்ந்து மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. SHARE

error: Content is protected !!