India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சிவகாசி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் (25) என்ற இளைஞர் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார் மாரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் +2 பொது தேர்வு எழுதிய மாணவர்களின் 100% உயர்கல்வி சேர்க்கையை வலியுறுத்தி ஏப்.27 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் மே.1க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள +2 தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9698810699 இல் அழைக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது வீட்டின் மின் மீட்டர் பெட்டியை இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யக்கோரி சூலக்கரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ரூ.1000 லஞ்சம் பெற்றதாக 3.1.2012 அன்று கைது செய்யப்பட்டார். இதில் கனகராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மல்லி அருகே நாகபாளையத்தில்,குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் நிலத்துக்கான பட்டா சண்முகத்தேவர் மற்றும் தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேறொரு பெயரில் முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவி.வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(39) டிரைவர். தனது நண்பர்களான இசக்கிமுத்து, கோவிந்தராஜன், மாரிமுத்து, பொன்ராஜ் ஆகியோருடன் பந்தப்பாறை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் தேங்கியுள்ள மழை நீரில் குளிக்கச் சென்றார். குவாரியில் குளித்த ஈஸ்வரன் திடீரென நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஈஸ்வரனை இரவு பகலாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
▶️செயற்கையான நூலிழைகளால் ஆன ஆடைகள் (Synthetic Fabrics)
▶️இறுக்கமான ஆடைகள் (Tight-Fitting Clothes)
▶️அடர் நிற ஆடைகள் (Dark-Colored Clothes)
▶️கனரக துணிகள் (Heavy Fabrics)
▶️ஃபிளிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops)
இந்த மாதிரியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் எரிச்சலையும் உண்டாக்குகிறது. *ஷேர் பண்ணுங்க*
திருச்சுழி அருகே K.மீனாட்சிபுரம் கிராமத்தில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வசந்த பாலமுருகன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.