India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர்: கோவில்வீரார்பட்டியை சேர்ந்த அய்யனார், தனது மனைவி தேவகி. மகன் அரவிந்த் (5) உடன் டூவீலரில் நேற்று மாலை மலைப்பட்டி கோயிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தரைப்பாலத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்றபோது அதில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இதில் தம்பதி கரை திரும்ப, சிறுவன் அரவிந்த் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினான். சிறுவன் உடல் நேற்று இரவு மீட்கப்பட்டது.
தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் சிவகாசியில், சாத்தூர் SI தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் (21) என்பவரை பிடித்து சோதனை செய்கையில், அவரிடம், பட்டாசு திரி இருப்பது தெரியவந்தது. அவரிடம் பட்டாசு திரியை பரிமுதல்ஸ் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
எம்.புதுப்பட்டி – மங்களம் ரோட்டில் ஜெயக்குமார் தனது தாய் மரியாள் உடன் டூவீலரில் சென்றபோது வேகத்தடையில் மோதி மரியாள் கிழே விழுந்ததில் பலத்த காயமுற்று உயிரிழந்தார். அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி முருகேசன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (31) உயிரிழந்தார். சாத்தூர் பகுதியில் கார் மோதியதில் டூவீலரில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் சவரிராஜன் (76) பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குன பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மாடுகளுக்கு பகலில் பசுந்தீவனம், இரவில் வைக்கோல் கொடுக்கவும், ஆடு, மாடு, கோழிகளை வெதுவெதுப்பான நீரை கொடுக்கவும், குளிர்ந்த சூழலை தவிர்க்கவும்,மாவட்டத்தில் கால்நடை அவசர கால ஊர்தி எண் 1962-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அனைத்து பாதுகாப்பு ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூரில் இருந்து வரும் பயணிகள் ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால இனிப்பு, கார பலகாரம் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. இவைகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு, சுகாதாரமற்ற கடைகள் குறித்து பொதுமக்கள் 04562-225255, 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். SHARE IT
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
விருதுநகர் மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? விருதுநகர் மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (04632-220018) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
சிவகாசி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவை பல சமயம் மக்களை கடிக்கவும் செய்தன. இந்நிலையில், விஸ்வநத்தம் ரோட்டில் செயல்படாமல் இருந்த தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மக்கள் கோரிக்கையை அடுத்து நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. சிவகாசி அரசு கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் ஷர்மிளா தலைமையிலான குழுவினர் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.