Virudunagar

News March 28, 2025

விருதுநகர் மாவட்டத்தில் பொருட்காட்சி ஆரம்பம்

image

விருதுநகர் மாவட்டத்தில், மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கே வி எஸ் வளாகத்தில் பொருட்காட்சி ஆரம்பமாகிறது. இந்த பொருட்காட்சி (மார்ச்.28) இன்று முதல் ஏப்ரல்.20 வரை நடைபெற இருக்கிறது. இதற்கான நுழைவு கட்டணம் ரூ.30 முதல் ரூ100 வரை (கட்டணம் நாட்களுக்கேற்ப மாறுபடும்) மக்கள் அனைவரும் பங்குனி பொங்கல் திருவிழாவை பொருட்காட்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் *ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

தேர்வறையில் நாகப்பாம்பு; மாணவர்கள் ஓட்டம்

image

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ் 1 கணக்கு பதிவியியல், வேதியியல் பாட தேர்வு நடந்து கொண்டிருந்தது. பள்ளி ஆய்வக அறையில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் உதவியாக ஆசிரியர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். காலை 11:35 மணியளவில் நாகப்பாம்பு ஒன்று தேர்வு அறைக்குள் நுழைந்தது. இதனை கண்ட மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். பின் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

News March 27, 2025

தீராத நோய் தீர்க்கும் கோட்டூர் குருசாமி சித்தர்

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டூர் குருசாமி சித்தர் சதுரகிரி மலைக்குச் சென்று அங்குள்ள சித்தர்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளார்.40 ஆண்டு கழித்து மலையை விட்டு இறங்கி சொந்த ஊரான கோட்டூரில் தங்கினார்.இவரிடம் குழந்தையின்மை, தீராத நோய்க்கு தீர்வு கேட்டு வருபவர்களிடம் மஞ்சள் கிழங்கு, ஆமணக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவதும் பின்னர் அது சரியாவதாக நம்பப்படுகிறது.பின் அவர் ஜீவசமாதி அடைந்தார்.

News March 27, 2025

அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகலாம்.

News March 27, 2025

சிவகாசியி மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

image

சிவகாசியில் டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள் எழுதி பாதுகாப்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. சிறுகுளம் கண்மாய் கரை நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை சுற்றி பாதுகாப்பிற்காக இரும்பில் லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறளை எழுதி வைத்துள்ளனர். இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

News March 27, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

image

விருதுநகர் மேட்டமலை குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மண்டல வருவாய் அலுவலர் ஆகியோர் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

27 பேர் பலியான வெடி விபத்தில் நிவாரணம் வழங்க தாமதம்

image

சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் 2021 பிப். 12 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியாகினர். இதில் 26 பேர் வரை காயமடைந்தனர். 2022 இல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு சதவீதங்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தாததால் பாதிக்கப்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

News March 27, 2025

விருதுநகரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, 2ம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, 3ம் தொகுப்பு ஏப்.29 – மே11, 4ம் தொகுப்பு மே.13 – மே.25, 5ம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751393412 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 27, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் இளைஞர் பலி

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பைக்கில் மாடசாமி என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மாரியப்பன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2025

மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம்

image

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆண்டில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4,129 குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், 2023-24ம் ஆண்டில் மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்து கன்னிசேரி புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் 2ம் பிடித்தது.

error: Content is protected !!